"அவள்
என் அன்பிற்குரியவள்!
இந்த அன்பிற்குரியவள்!
தனியே இவன் பிறந்தும்
என்னில் பாதி.
என் தோழியானவள்,
துன்ப நேரங்களில்
தோள்களானவள்.
நாங்கள் பிரிவெய்தக் கூடாது.
வயது மூத்து நரை கழலும் போதும்
நாங்கள் பிரிவெய்தக் கூடாது.
கவிதை கூட கலப்படம் எய்தும்.
என்னவள் இலக்கணம்
இப்படித்தான் என வரையறுக்கப்பட்டவள்.
அவளை நான் காதலித்திருக்கவேண்டும்
நாட்கள் வீணே நகர்ந்து போய்விட்டன.
வாழ்ந்த இடம் கூட தொலைவாகிவிட்டது.
ஆம்,
அவளை நான் காதலித்திருக்க வேண்டும்
அப்படியெனில்,
என் முயற்சிகளில் வெற்றி சாதித்திருப்பேன்,
வாழ்வியலில் ஜெயித்திருப்பேன்
என் ஊன்றுகோலாக அவளை கைக்கொண்டு.
இருந்தாலும் என்ன?
காலம் தாமதம் எனினும்
எல்லாம் கடந்தவன் காட்டிக்கொடுத்தான்
அவளை எனக்கே கட்டிக் கொடுத்தான்
இதோ உன் மனைவி
இவள் தான், இவளே தான் என்று!
என் அன்பிற்குரியவள்!
இந்த அன்பிற்குரியவள்!
தனியே இவன் பிறந்தும்
என்னில் பாதி.
என் தோழியானவள்,
துன்ப நேரங்களில்
தோள்களானவள்.
நாங்கள் பிரிவெய்தக் கூடாது.
வயது மூத்து நரை கழலும் போதும்
நாங்கள் பிரிவெய்தக் கூடாது.
கவிதை கூட கலப்படம் எய்தும்.
என்னவள் இலக்கணம்
இப்படித்தான் என வரையறுக்கப்பட்டவள்.
அவளை நான் காதலித்திருக்கவேண்டும்
நாட்கள் வீணே நகர்ந்து போய்விட்டன.
வாழ்ந்த இடம் கூட தொலைவாகிவிட்டது.
ஆம்,
அவளை நான் காதலித்திருக்க வேண்டும்
அப்படியெனில்,
என் முயற்சிகளில் வெற்றி சாதித்திருப்பேன்,
வாழ்வியலில் ஜெயித்திருப்பேன்
என் ஊன்றுகோலாக அவளை கைக்கொண்டு.
இருந்தாலும் என்ன?
காலம் தாமதம் எனினும்
எல்லாம் கடந்தவன் காட்டிக்கொடுத்தான்
அவளை எனக்கே கட்டிக் கொடுத்தான்
இதோ உன் மனைவி
இவள் தான், இவளே தான் என்று!
No comments:
Post a Comment